அஸ்ஸலாமு அலைக்கும்

Thursday, 22 December 2011

தீனில் ஷிர்க்.....!


தீனில் ஷிர்க்--அல்லாஹ்வுடைய ஜாத்(உள்ளமை) சிபாத்(தன்மைகள்), அப்ஆல்(செயல்பாடுகள்), ஆசார்(உடமைகள்) இவைகளில் இணைவைப்பதை விட்டும் தப்பவேண்டும், ஜாத்(உள்ளமை) சிபாத்(தன்மைகள்), அப்ஆல்(செயல்பாடுகள்), ஆசார்(உடமைகள்) இவைகளை பற்றி விளங்கவில்லையெனில் ஷிர்கை விட்டு தப்புவதும் முடியாத காரியம். அல்லாஹ் ஹயாத்தாகவும், தரிபாடகவும் இருக்கின்றான், நாமும் ஹயாத்தாகவும், தரிப்படாக இருப்பதாக விளங்குகின்றோம், இந்த இடத்திலிருந்து ஷிர்க் ஆரம்பமாகிறது. இதுவே உண்மையான (ஹகீகி) ஷிர்க்காக ஆகும்.
உருவ வழிபாடு செய்வது ஷிர்க்குக்கு ஒப்பான செயல்(மஜாஸி ஷிர்க்) சுஃபியாக்களின் கூற்றுப்படி குப்ரே பாதில் ஆகும்ஜாத்திலும், சிபத்திலும் ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே கேட்டல், பார்த்தல் போன்ற சிபாத்துக்கள் சொந்தமாக இருக்கும்போது, நாம் பார்ப்பதாக, கேட்பதாக நினைக்கின்றோம், இது அல்லாஹ்வின் சிபத்தில் இணைவைப்பதாகும்.
பொதுஜனங்கள் இதனை அல்லாஹ்வைப் போல(அனைத்தையும்) கேட்பவர்களாகவும், பார்ப்பவர்களாகவும் இல்லை, என விளக்கம் தருகின்றார்கள். இது அவர்களின் அறியாமை மிக அழகாக அவர்களை ஏமாற்றிவிட்டது. அல்லாஹ் தஆலாவை போல் நாம் பார்ப்பதில்லை, கேட்ப்பதில்லை என கூறுவது அவனுக்கு மிஸ்லியத்(முற்றிலும் ஒப்பாக இருப்பதை) மறுப்பதாகும், ஆனால் முஷாபஹத்(சிறிதளவேனும் ஒப்பாக இருப்பதை) நிராகரித்தாகது, அல்லாஹ் தஆலா மிஸ்லியத், முஷாபஹத் இரண்டையும் விட்டு பரிசுத்தமானவன் என்று நம்புவதே தவ்ஹீது ஆகும்.
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ

No comments:

Post a Comment