அஸ்ஸலாமு அலைக்கும்

Sunday, 1 January 2012

மய்யத்தின் நிலை சிலமணி நேரமே,


ராஜ திக்ரு பற்றி எனது வலைதளத்தில் வெளியான செய்தி பற்றி, "இது எப்படிங்க?" என்பன போன்ற சில சந்தேகங்களை அன்பர்கள் கேட்டிருந்தனர், மிக எளிமையான சிறிய விளக்கம் தருகின்றேன்,ஒன்றை நாம் அடிக்கடி சொல்லிக் கொண்டுடியிருந்தால் அதனை நமது மனம் எடுத்துக் கொள்ளும்,அதாவது பதியப்பட்டுவிடும், அதன் பின் வாயை முடிக்கொண்டலும் மனம் சொல்லிக் கொண்டிக்கும், இதுவரை தாங்களுக்கு விளங்கும், தாங்களின் சந்தேகம்  ருஹு எப்படி திக்ரு செய்யும் எனும் இடத்தில் எனில், ஒர் உதாரணம்--தாங்களின் அருகில் பாம்பு வந்துவிட்டது உடன் பயம் வந்துவிடும், வாய் பாம்பு, பாம்பு என பிதற்ற ஆரம்பித்து விடும், பின் கல்பில் அந்த பயம் கவ்விக்கொள்ளும், மனம் பயத்தில் துடிக்க ஆரம்பித்துவிடும், அதன் பின் கல்பில் உண்டான பயம் ருஹில் அடையும், இப்போது உடல் பூராவும் ருஹு உள்ளதால் முழூஉடலும் பயத்தால் நடுங்கும், இந்த விளக்கத்தை வைத்து விளங்கி கொள்வீர்கள், (வாயால் கூறும் திக்ரு, கல்புக்கும், ருஹுக்கும் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும்)
அடுத்த சந்தேகம் மரணத்திற்கு பின் எப்படி சாலாமத்தாக இருப்பார்கள் எனும் விஷயத்தில் எனில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், மவ்திற்க்கு பின் மீண்டும் நாம் ஏழுப்படுவோம், அதுவும் சிலமணி நேரங்களில் கபரில் வைத்த உடன் எழுப்பபட்டு மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும், அதன்பின்  நன்மராயம் கூறப்பட்டால், சுகத்துடன் கபரில் உறங்குவார்கள், நன்மராயம் கூறப்படவில்லை என்றால் கபரின் வேதனையினை அனுபவிப்பார்கள், இந்த இடத்தில் கவனிக்க  வேண்டியது, மய்யத்தின் நிலை சிலமணி நேரமே, மனிதன் மரணிக்கும் தருவாயில் எதை கூறியவண்ணம் மரணிக்கின்றாரோ, அதை கூறியவண்ணமே எழுவார். மீண்டும் மரணிக்கபடுவதில்லை, எனவே  திக்ருடன் மரணிக்கும் மனிதர் திக்ருடனே இருப்பார்கள், மீண்டும் எழும்போதும் திக்ருடனே எழுவர்கள்இப்பொழுது தாங்கள் விளங்கி இருப்பீர்கள். மேலும் தாங்களுக்கு சந்தேகம்  எனில் மேலும் விளக்கம் பெற இன்ஷா அல்லாஹ் நேரில் நாம் சந்திக்கும் பாக்கியத்தை அல்லாஹ் தரும்பட்சத்தில்
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ

No comments:

Post a Comment