அஸ்ஸலாமு அலைக்கும்

Tuesday, 31 January 2012

அகக்கண் குருடாகி இருப்பதின் அடையாளமாயுமிருக்கும்.


அல்லாஹுத்த ஆலா உனக்காப் பிணையேற்றுக் கொண்ட இரணம் போன்றவற்றில் நீ முயற்சி செய்து கொண்டு, உன்னிடத்தில் அவன் கேட்டுக் கொண்ட தொழுகை,நோன்பு, திக்ரு, பிக்ரு போன்ற இபாதத்துகளில் நீ குறை செய்வது உன்னுடைய அகப்பார்வை மங்கிவிட்டதன் அடையளாமாகும். "என்னை (யறிந்து) வணங்குவதற்கல்லாது மனித வர்க்கத்தையும், ஜின் வர்க்கத்தையும் நான் படைக்கவில்லை" என்றும் "உலக உயிரினங்களின் இரணம் அல்லாஹ்வின் வசம் இருக்கிறதென்றும்" அவன் கூறுகிறான். அவ்விதமிருக்க நாம் இரணங்களுக்கு முயற்சித்து வணக்கங்களில் அசட்டையாயிருப்பது, அல்லாஹுத்த ஆலாவின் மீதும் அவனது வசனமாகிய குரானின் மீதும் உண்மையான நம்பிக்கை இல்லை என்ற அத்தாட்சியாகும். இன்னும் அதனை சிந்திக்கும் அகக்கண் குருடாகி இருப்பதின் அடையாளமாயுமிருக்கும்.
நன்றி-- நூல்--மெய்வழி (ஹிகம்)

No comments:

Post a Comment