அஸ்ஸலாமு அலைக்கும்

Sunday, 15 January 2012

இலாஹ்


இலாஹ்

வணக்கத்திற்குரியவன், (மஹ்பூத்) அல்லா ஒருவன் மட்டுமே வணக்கத்திற்க்குரியவன், படைப்புக்கள் ஏதுவுமே வணக்கத்திற்க்குதகுதியுடையவையல்ல, ஏதுஒன்று,  தன்தேவையற்றதாக இருந்துபிறவற்றின் தேவைகளை பூர்த்திசெய்கின்றதோ அதுஒன்றுமட்டுமே வணக்கத்திற்க்கு தகுதியுடையதாகும். இந்த தகுதி அல்லாஹ்ஒருவனுக்குமட்டுமேஉண்டு, அவனேஅனைத்துபடைப்புக்களின் தேவைகளையும்பூர்த்திசெய்யக்கூடியவனாகஇருக்கின்றான், ஆனால் அவனுக்கு எந்ததேவையும்இல்லை, இதுவேசாத்தியமானநிலை, இலாஹ் உடையவிஷயத்தில்செய்யப்படும்ஷிர்க்என்ன? இதில்இணைவைத்தல்என்ன? அல்லாஹ்அல்லாதவைகள் அதாவதுஅல்லாஹ்வைக்கொண்டுதான்அனைத்தும்நடந்தது,  நடக்கின்றது, நடக்கும் என்ற சிந்தனை உணர்வின்றி அல்லாஹ்வை  மறந்தவர்களாக கேட்டேன், பார்த்தேன், சொன்னேன், செய்தேன், கேட்கப்பட்டது, பார்க்கபட்டது, சொல்லபட்டது, செய்யபட்டது, இது போல் அனைத்தும் ஷிர்க் ஆகும். வெளிப்படையாக பார்க்கும் போது படைப்புக்கள் ஒன்றுக்கொன்று தேவைகளை பூர்த்தி செய்வதாக தோன்றும், ஆனால் இது உண்மை நிலை அல்ல, படைப்புகளின் முலம் அல்லாஹ்தான் தேவைகளை பூர்த்தி செய்கின்றான் என்று விளங்க வேண்டும். எந்த படைப்பும் சுயமாக தனது சுயதேவைகளையும் பிறவற்றின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாதவை, மேலும் தனக்கென தேவையுடையவை, உதாரணமாக- நமக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவரிடம் செல்கின்றோம் நமது தேவை உடல் நிலை குணமாக வேண்டும், மருத்துவர் சிகிச்சை அளிக்கின்றார் அதன் முலம் நாம் நலமாகிவிட்டோம் இந்த இடத்தில் நமது தேவை மருந்துவரைக் கொண்டு நமது தேவை பூர்த்தி அடைந்தது எனவே மருத்துவர் இலாஹ்வாக முடியுமா? இல்லை முடியாது காரணம் நமக்கு சிகிச்சை அளிப்பதான் முலம் அவரின் தேவைக்கான பணத்தை அவர் அடைகின்றார், நம் தேவையினை பூர்த்தி செய்வதான் முலம் அவரின் தேவையும் பூர்த்தி அடைகின்றது, எனவே தேவையுடைய ஒன்று இலாஹ்வாக முடியாது, மருத்துவரின் முலம் அல்லாஹ்தான் தேவைகளை பூர்த்தி செய்தான் என்ற உண்மை நிலையினை அறிவதன் முலமே அல்லாஹ் மட்டுமே இலாஹ் என அறிந்து உணர்வு பூர்வமாக அல்லாஹ்விற்க்கு நன்றி செலுத்துவதும் சதாவும் அவனை ஞாபகம் செய்வதும் நம்மீது கடமையாகின்றது.
கண்ணியமிக்கஷெய்ஃகுஹக்கீமீஷாபைஃஜிஅவர்களின்ஃபைஜானைக்கொண்டு--ஹலில்ரஹ்மான்ஹக்கீமீ

No comments:

Post a Comment