அஸ்ஸலாமு அலைக்கும்

Sunday, 29 January 2012

அல்லாஹுத்த ஆலா உன்னை ஒரு வேலையில் ஏற்படுத்தியிருக்கும் போது


அல்லாஹுத்த ஆலா உன்னை ஒரு வேலையில் ஏற்படுத்தியிருக்கும் போது நீயாகவே அந்த தொழிலை விட்டுவிட நினைப்பது உன்னில் மறைந்திருக்கும் பேராசையாகும், ஏனென்றால் உனது ஏஜமானகிய அல்லாஹுத்த ஆலாவின் ஏற்பாட்டை நீ பொருந்தாமல் உனது (நப்ஸின்) எண்ணப்படி நடக்கவிரும்புகிறாய், (எனவே) அவ்விதம் எண்ணுவதின் வெளிப்படையான நோக்கம், அல்லாஹுத்த ஆலாவின் தியாகத்திலேயே இருந்து அவனோடு முடுகவேண்டு மென்பதாகவிருந்தாலும் உண்மையில் அதன் நோக்கம் நீ பெரிய மனிதன் அவ்லியாகளின் குணம் பெற்றவன், என ஜனங்களில் பிரசித்தி பெற்று மனிதர்கள் உன்னை நோக்கி வர வேண்டும்(என்பதும்) எந்த வகையிலாவது மதிப்பு வேண்டும் என்பதுமேயாகும், இவ்வித எண்ணம் கொள்வது (முரிதுகளை) அல்லாஹ் வழியில் நடப்பவர்களை கொல்லும் நஞ்சாயிருக்குமென பெரியோர்கள் கூறுகிறார்கள் மேலும் ஜனங்கள் உன்னை விரும்பி வரப்போகவிருந்தால் உனது நித்திய இபாதத்திற்கு இடையுறு ஏற்பட்டு அவைகளை விட வேண்டியதாய் ஏற்படும், இதனால் நீ சாதாரண மனிதர்களிலும் மோசமானவனாக ஆகிவிடுவாய்.
அல்லாஹுதஆலா உன்னை தொழிலை விட்டும் ஒழித்து வைத்திருக்க, நீ தொழிலை விரும்புவது மேலான மனோ உறுதி யென்ற உச்ச நிலையை விட்டும் இறங்குவதாயிருக்கும். ஏனெனில் நீ உலக தொழிலை விட்டும் விலகி அல்லாஹுத ஆலாவைக் கொண்டு பொருந்தி அவன் ஊழியத்தில் ஈடுபட்டு அவனைக் கொண்டும்  கொழுகி இன்பம் பெற்றிருந்தாய், இப்போது அவனை விட்டும் விலகி உலக மக்களோடு கலந்து (கல்கு) சிருஷ்டிகள் என்ற உலகத்தோடு கொழிகிவிட நாடுகிறாய், ஆகையால் உண்மையனா ஸாலிக்காக இருந்தால் அல்லாஹுத ஆலா தன்னை எவ்விதமாக வைத்திருக்கின்றானோ அதை அன்போடு ஏற்று பொருந்தி இருக்கவேண்டும், தானாகவே வேறொன்றை விரும்பவும் புறக்கணிக்கவும் கூடாது, அவ்வாறு செய்வதால் அவன் ஏற்பாட்டைப் பொருந்தாத நன்றி கெட்டவனாக ஆகி விடுகின்றான். அல்லாஹ் நம்மை காப்பானாக.
நன்றி--- நூல் (ஹிகம்) மெய்வழி
 தொகுப்பு--- ஹலில் ரஹ்மான் ஹக்கீமி.




No comments:

Post a Comment